அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் வாக்குப்பெட்டிகள் வாக்ககெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!!

 நாளைய தினம் (14) இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


நாட்டின்  பத்தாவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை காலை 07.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.  



முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்ப்பட்டுவரும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெடுப்பு நிலையங்களிற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.



இதேவேளை முல்லைத்தீவில் 89,889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக  பொலிசார் மற்றும் 1653 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












முல்லைத்தீவில் வாக்குப்பெட்டிகள் வாக்ககெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!! Reviewed by Author on November 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.