அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள், உற்பத்தி கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்.

 மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில். “நாமும் சாதனையாளர்களே” என்னும் கருப்பொருளில்,மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திக் கண்காட்சி மற்றும்,  நிகழ் வுகள்இன்று (22), வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து,மாலை 4 மணிவரை, மன்னார், நகரமண்டபத்தில் நடைபெற்றது.


வாழ்வுதய இயக்குனர் அருட்பணி  அருள்ராஜ் குரூஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மாற்றுத் திறனாளிகளின் நிகழ்வுகள்   மற்றும் பொருட்கள்  கண்காட்சியும் இடம்பெற்றது.


மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்துடன் இணைந்து,கரிற்றாஸ் கியூடெக் வன்னி, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளின் கைவண்ணங்களும் இங்கே காட்சிப்படுத்தப் பட்டதுடன் அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

 

அத்துடன் சிறு கைத்தொழில் மேற்கொள்ளும் பெண்களின். தயாரிப்புகளும் சந்தைப் படுத்தப் பட்டிருந்தது.


குறித்த நிகழ்வில்,மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,மன்னார்  மறைமாவட்ட குருமுதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் கரிற்றாஸ், வாழ்வுதயத்தின் இயக்குனர், மற்றும். பணியாளர்கள் கலந்து கொண்டதோடு,பொதுமக்களும் கலந்து கொண்டனர்









மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள், உற்பத்தி கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல். Reviewed by Author on November 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.