150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை
வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் கடல் பகுதிக்கு அருகே நவம்பர் 25ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.
இது தொடர்ந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது.
இந்த முறைமையின் தாக்கத்தினால், நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Reviewed by Author
on
November 23, 2024
Rating:


No comments:
Post a Comment