சிறப்பாக இடம்பெற்ற மன்/சாந்திபுரம் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
மன்னார் சாந்திபுரம்(G.T.M.S) வ ஆரம்ப பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (14) மாலை பாடசாலை அதிபர் கிறிஸ்ணபவானதம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயகல்வி பணிமனையின் கோட்டக்கல்விப பணிப்பாளர் சந்தியோகு மற்றும் விருந்தினர்களாக வலையகல்வி பணிமனையின் ஆசிரிய வளவாளர்கள் முருகவேல் மற்றும் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கண்காட்சி ஆக்க கண்காட்சி இடம் பெற்றது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களான பரிசில்களும் விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment