15 திரையரங்குகளில் வெளிவர இருக்கும் "ரணதீரா" முழு நீள திரைபடம்
இலங்கையின் 15 மாவட்டங்களை சார்ந்த 100 தமிழ் கலைஞர்களை உள்ளடக்கி "ரணதீரா" என்னும் முழுநீள திரைபடம் உருவாகி உள்ளது..
இத்திரைப்படத்தில் மன்னார் மாவட்டத்தில் வளர்ந்து வரும் கலைஞர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் மன்னார் மாவட்டத்தின் வளர்ந்து வரும் இசைக் கலைஞன் பிரதீப் SP1 இசையில் இத் திரைபடம் அமைய பெற்றுள்ளது
இத்திரைப்படமானது சில்லையூர் றெஜியின் இயக்கத்திலும், கிலோஷன் இன் ஒளிப்பதிவிலும், டக்சனின் ஒளித்தொகுப்பிலும் உருவாக்கப்பட்ட நிலையில்
இலங்கை முழுவதும் 15 திரையரங்குகளில் எதிர்வரும் 4 திகதி பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது குறித்த படத்திற்கு வருகை தந்து ஈழ சினிமாவின் வளர்சிக்கு பங்களிப்பு செய்யுமாறு படக்குழு கோரிக்கை விடுத்துள்ளது

No comments:
Post a Comment