தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (03) நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாகக் கருதப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவுக்குப் பிறகு தேர்தல் நாள் வரை எந்தவொரு பிரச்சார நடவடிக்கையும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 4150 முறைப்பாடுகள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.
அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக 28 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பாக 3,860 முறைப்பாடுகளும், இதர 262 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.
அவற்றில் 3,495 முறைப்பாடுகள் இதுவரை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 655 முறைப்பாடுகளை தீர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
Reviewed by Vijithan
on
May 03, 2025
Rating:
Reviewed by Vijithan
on
May 03, 2025
Rating:


No comments:
Post a Comment