யாழ் குப்பிளானில் பலத்த காற்றால் வீட்டின் மீது விழுந்த பனை மரம்
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.
இதன்போது , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குப்பிளான் ஜே/211 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் முன்பாக நின்ற பனை மரம் , கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் வீடும் காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இத்தகவலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் குப்பிளானில் பலத்த காற்றால் வீட்டின் மீது விழுந்த பனை மரம்
Reviewed by Vijithan
on
September 26, 2025
Rating:

No comments:
Post a Comment