அண்மைய செய்திகள்

recent
-

தாம் கைதான சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த ரணில்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார். 


ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார். 


குறித்த முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். 


எவ்வாறாயினும் தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து திரும்பியதாகவும், கொழும்பு திரும்புவதற்கு முன்பு ஒரு இரவை அங்கேயே கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயல்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம் என்றும் அவர் கூறினார். 


தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாது இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.




தாம் கைதான சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த ரணில் Reviewed by Vijithan on September 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.