அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் தலைமையில் குழு விஜயம்-பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு.

 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தலைமையில் விசேட குழுவினர் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இன்றைய தினம் புதன்கிழமை (8) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.


இதன் போது வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட வைத்திய பரிசோதனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விசேட கூட்டம் இடம் பெற்றது.


இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 


மேலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,உதவி பிராந்திய சேவைகள் பணிப்பாளர், ஆகியோர் கலந்து கொண்டதோடு,வடமாகாண ஆளுநருடன் வடமாகாண பிரதம செயலாளர்,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வடமாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ஆகியோர் வருகை தந்திருந்தனர்.


இதன் போது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


குறிப்பாக தேவைகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள அதிகமான கட்டிடங்கள் பழமை வாய்ந்த கட்டிடங்களாக உள்ளமையினால் அவற்றை மாற்றி அமைத்தல்,மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், உள்ளிட்ட விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது.


மேலும் நோயாளிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்,அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இதன் போது இந்திய அரசின் நிதி உதவியுடன் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள கட்டிடம் குறித்தும் ஆளுநர் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.


மேலும் மாகாண நிதியில் இருந்து   திட்டம் ஒன்றை வகுத்து 2026 ஆம் ஆண்டுக்கான நிதியில் இருந்து 3 மாடி கட்டிடம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கவும் கலந்துரையாடப்பட்டது.


மேலும் அடுத்த வருட நிதியில் இருந்து சீ.டி.ஸ்.கேன் இயந்திரம் ஒன்றையும், மேலும் சில உபகரணங்கள் கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.


மேலும் வைத்தியர்களுக்கான விடுதி , வைத்தியசாலைக்கான ஆளணி உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.


மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண ஆளுநர்  தெரிவித்தார்.


மேலும் மன்னாரில் காற்றாலை செயல்திட்டம் குறித்து ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் வழங்கினார்.காற்றாலை விடையம் பேசி தீர்க்கப்பட வேண்டும்.அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்று கலந்துரையாட பட வேண்டும்.


எங்களுக்கு என்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து கலந்துரையாட முடியும்.எனவே கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கான முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.












மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் தலைமையில் குழு விஜயம்-பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு. Reviewed by Vijithan on October 08, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.