கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்படக்கூடிய அதிக சாத்தியம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
November 20, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 20, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment