மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகர பிரதேசத்தில் காணி பிணக்குகள் தொடர்பான பகுதி நாட்கூட்டம்!
மாந்தை மேற்கு மற்றும் மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூடம் 2026-02-13 இன்று மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காணி உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆவணச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் வடமாகாண காணி ஆணையாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாந்தை மேற்கு பிரதேச செயலக செயலாளர், மன்னார் நகர பிரதேச செயலாளர் தொடர்புடைய துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
Reviewed by Vijithan
on
February 13, 2026
Rating:


No comments:
Post a Comment