அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைப்பு.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24)  மாலை   வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது




 குறித்த  வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.


 இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைப்பு. Reviewed by Vijithan on February 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.