அண்மைய செய்திகள்

recent
-

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

 ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது. 


ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கிச் சென்ற ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே நீரிணைக்குள் நுழைந்த மற்றொரு கப்பலையும் அமெரிக்கா குறிவைத்ததாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தூண்டுதலற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அத்தாக்குதல்களுக்குக் காரணமான ஈரானியத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தபோது, ஈரான் பல ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.










ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! Reviewed by Vijithan on May 08, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.