மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று (28) மாலை உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்தமையினால் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொந்தமான இப்பாலம் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த பாலம் இடிந்துவீழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு நகருக்குள் இரண்டு பிரதான பாலங்கள் நுழையும் வகையில் உள்ள நிலையில், அதில் ஒரு பாலம் உடைந்துவீழ்ந்தமையினால், ஒரு பாலத்தை மாத்திரமே பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை வௌியிடுகின்றனர்.
மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு
Reviewed by Vijithan
on
June 28, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 28, 2026
Rating:


No comments:
Post a Comment