அண்மைய செய்திகள்

recent
-

நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு

 டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்தார். 


இவ்வாறு உயிரிழந்தவர் திக்வெல்ல, நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

கடும் காய்ச்சல் காரணமாக முதன்முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அச்சிறுமி உயிரிழந்துள்ளார். 

காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.




நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு Reviewed by Vijithan on July 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.