அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் விபத்து: மதுபோதை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது!

 வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. 


வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். 

பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




வவுனியாவில் விபத்து: மதுபோதை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைது! Reviewed by Vijithan on August 01, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.