அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா கிணற்றிலிருந்து இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபரின் சடலம்...........

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையேன தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... சடலத்தினை மீட்டெடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுந்தபுரம் பகுதியினை சேர்ந்த பொதுஐன பெரமுன கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ஐனக்க நந்தகுமார அவர்களின் ஆதரவாளர் ஆகிய 34 வயதுடைய நித்தியானந்தம் என்ற நபராகும்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபரின் தலையின் பின் பகுதியிருந்து இரத்தம் வந்துள்ளமையினால் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என உயிரிழந்த நபரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....



வவுனியா கிணற்றிலிருந்து இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட நபரின் சடலம்........... Reviewed by Author on July 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.