இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்:
இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்ம படகு மூலம் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (1) இரவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்:
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment