அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்:

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் உள்ளிட்ட சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (1) இரவு பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சுறா இறகு , சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் போது வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த 34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள், 13 மூடைகளில் 400 கிலோ சுறா இறகு, பதப்படுத்திய கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்ம படகு மூலம் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (1) இரவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 40 லட்சம் மதிப்புள்ள சுறா இறகு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் பறிமுதல்: Reviewed by Author on January 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.