யாழ். வடமராட்சியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி: மாமனார் படுகாயம்!
மருமகனின் வாள் வெட்டில் மாமியார் பலியான சம்பவம் யாழ்.நெல்லியடி சந்தான பிள்ளையார் கோவில் பகுதியில் இன்று புதன்கிழமை (11.03.2026) மாலை இடம்பெற்றுள்ளது .
யாழ்.வடமராட்சி பருத்தித்துறை கிராமக் கோடுப் பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு மனைவியின் தாயாரையும் மருமகன் வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் 41 வயதான நபரே இந்தச் செயலில் ஈடுபட்ட நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வடமராட்சியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி: மாமனார் படுகாயம்!
Reviewed by Vijithan
on
March 11, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 11, 2026
Rating:


No comments:
Post a Comment