அண்மைய செய்திகள்

recent
-

நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் சடலங்களும் மீட்பு

நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலைப் பகுதியில் விழுந்து நொருங்கியது. இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்றுக் காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். நேற்றே 21 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

 ஒருவரது சடலம் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதற்கிடையே விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்புப் படையினர் கண்டுபிடித் தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் சடலங்களும் மீட்பு Reviewed by Author on May 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.