யுத்தத்தால் மன்னாரில் கணவன் மார்களை இழந்த பெண்களுக்கு கரிட்டாஸ் நிருவனம் உதவி-(படங்கள் இணைப்பு)
மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் அதிகலவான பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வருமானத்தினைத் தேடிக்கொள்வதற்காக மன்னார் சகவாழ்வு மன்றம் ‘கரிட்டாஸ்’அமைப்பின் நிதி உதவியுடன் தெரிவுசெய்யப்பட்ட குடும்பப்பெண்களுக்கு வீட்டுத்தோட்டம்,தையல்,நாட்டுக்கோழிக் குஞ்சு வளர்த்தல் போன்ற வாழ்வாதார உதவிகளை வளங்கியது.இவ் உதவித்திட்டத்தின் பயனாளிகளை நேரில் சென்று ‘கரிட்டாஸ் செக்ரிப் பப்லிக்’அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சில்வா கோறோ கோவா,சகவாழ்வமன்ற தலைமை அலுவலக அதிகாரி ஜீவன் அமரசிங்கம் உற்பட சகவாழ்வு மன்ற பனியாளர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்தத்தால் மன்னாரில் கணவன் மார்களை இழந்த பெண்களுக்கு கரிட்டாஸ் நிருவனம் உதவி-(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:
No comments:
Post a Comment