மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிபகிஷ்கரிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை பிரசோதணைக்கு என வருகை தந்திருந்த அதிகாரியின் முறையற்ற நடவடிக்கையே இப்பகிஸ்கரிப்பிற்கு காரணம் என தெரிய வருகின்றது.
வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்ட குறித்த அதிகாரி கணக்காய்வினை மேற்கொள்ளாது வைத்தியர்களின் N;சவை தொடர்பில் குறைகாணும் முயற்சியிலையே ஈடுபட்டு வந்ததாகவும் வைத்தியர்களுக்குரித்தான பதிவேடுகளில் தேவையற்ற விதத்தில் கையாடல்களை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிகாரியின் இத்தகைய செயற்பாடுகள் மன்னார் வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்களை மன வேதனைக்கு உள்ளாக்கியிருப்பதாக கருதியே மேற்படி அடையாள பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்றிருக்கின்றது.
இன்று இடம்பெற்றிருக்கும் பகிஷ்கரிப்பின் காரணமாக வைத்திய சாலைக்கு பல்வேறு வைத்திய தேவைகள் நிமிர்த்தம் வருகை தந்திருந்தவர்களும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
மன்னார் நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகள் மீள்குடியேற்றப்பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காகவும், மருத்துவ பரிசோகணைகளுக்காகவும் வருகைதந்திருந்த பலரும் வைத்திய சாலையின் வளாகத்தினள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இது இவ்வாரிருக்க பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுடன் மன்னார் பிரஜைகள் குழுவினர் சந்திப்பு ஒன்றை நடாத்தியதன் பயனாக வைத்தியாகள் அதனை கை விட்டிருப்பதாக தெரிவிக்கின்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை பேனோ அலெக்சான்டர் சில்வா மற்றும் உருப்பினர்கலான அ.சகாயம் மற்றும் ஜனாப் ஜீனுஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் வினோத் -238;)
மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிபகிஷ்கரிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 23, 2011
Rating:
No comments:
Post a Comment