அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காட்டுப்பள்ளி காட்டில் குற்றச்செயல்கள் பெருமளவு அதிகரிப்பு

மன்னார் காட்டுப்பள்ளிவாசல் கடற்கரைப் பகுதியிலுள்ள அடர்ந்த காட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பொதுமக்களும் பொது அமைப்புகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஆட்டோக்களில் வெளியிடங்களைச் சேர்ந்த பெண்கள் இக்காட்டுப் பகுதிக்குள் பகிரங்கமாக பகல் நேரங்களில் அழைத்து வரப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


பாடசாலை மாணவர்களும் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் நேரங்களில் இப்பகுதிக்கு வருகின்றனர்.
அத்துடன் மது அருந்துவோர் போதைவஸ்து பிரியர்களும் இக்காட்டுப் பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
தற்போது தென்பகுதியிலிருந்து வரும் சிலரும் இப்பகுதிக்கு உல்லாசமாகச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் இந்த செயற்பாடுகளை உரியவர்கள் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் காட்டுப்பள்ளி காட்டில் குற்றச்செயல்கள் பெருமளவு அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on July 09, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.