மன்னார் சௌத்பார் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மன்னார், சௌத்பார் கடற்கரையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்திய மீனவர் எனக் கருதப்படும் ஒருவரின் சடலம் மன்னார் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சௌத்பார் கடற்கரைக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தினை கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.அதன்பின் கடற்படையினாரல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்தே பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்பட்டது.
மன்னார் நீதவான் கே.ஜீவரானியின் உத்தரவிற்கமைய சடலம் சோதனையிடப்பட்ட போது குறித்த நபர் அணிந்திருந்த உடையின் பொக்கற்றில் இருந்து இந்திய நாணயம், இந்திய தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டன.
கடலில் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களின் பாணியில் இவர் ஆடை அணிந்திருந்ததால் இவர் மீனவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் சௌத்பார் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
August 02, 2011
Rating:

No comments:
Post a Comment