மன்னாரில் 20 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயால் இது வரையில் 20 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச் .எம்.அசாத் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக டெங்கு நோயால் பாதிக்கப் பட்ட சுமார் 10 பேர் மாத்திரமே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இருப்பினும் தற்போது டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மன்னார் பனங்கட்டிக் கொட்டு சேர்ந்தவர்களாக காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையினை தொடர்ந்து டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னாரில் 20 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 30, 2011
Rating:
No comments:
Post a Comment