அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்கள் தொடரும் அவலம் ...????

மன்னார் மாவட்டத்தில் கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கடற்படையினரின் பாஸ் அனுமதியைப் பெற்N கடலுக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது.

போர் ஓய்வுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தொட்டுவிட்ட நிலையிலும் சிறிலங்கா படையினரது கெடுபிடிகள் நீடித்துக் கொண்டே செல்கின்றன.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீளவும் பாஸ் நடைமுறையை சிறிலங்கா கடற்படையினர் கொண்டுவந்திருந்தனர்.

முதலில் கடற்படையினரால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவம் நிரப்பப்பட்டு 10 அதிகாரிகளினால் கையொப்பமிடப்பட்டு உறுதிபடுத்தப்பட வேண்டும்.

இதன் பின்னரே கடற்படையினர் புகைப்படம் ஒட்டிய மீனவர் அடையாள அட்டையினை வழங்குவார்கள்.அதனைக்கொண்டுதான் கடலில் தொழில் செய்ய முடியும்.

அடையாள அட்டையினைப்பெற்றுக்கொள்ள சுமார் 2 மாதங்கள் வரை செல்லும்.கடந்த வருடம் வழங்கப்பட்ட கடற்தொழில் பாஸ் காலம் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் 2012ம் ஆண்டுக்குரிய பாஸ் அனுமதியை வழங்க கடற்படையினர் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர்.

குறித்த விண்ணப்பப்படிவத்தில் மன்னார் மாவட்ட கடற் தொழில் திணைக்கல அதிகாரி,கிராம சேவகர்,கடற்தொழில் பரிசோதகர், மீன் சந்தைப்படுத்தும் அதிகாரி, இரானுவ உயரதிகாரிகள் உற்பட 10 பேரிடம் உறுதிப்படுத்தப்பட்ட கையொப்பம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் மீனவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கெடுத்து வருவதாக மீனவர்கள்; தெரிவிக்கின்றனர்.

மன்னார் மீனவர்கள் தொடரும் அவலம் ...????

மன்னார் மீனவர்கள் தொடரும் அவலம் ...???? Reviewed by Admin on January 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.