எனது முகத்திரையினை கிழிக்க ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துசெய்தி - விளக்குகிறார் அமைச்சர் றிசாத்

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பொன்றால் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்திற்கு என்னை சம்பந்தப்ப்படுத்தி வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
பாராளுமன்றத்தில் என்னால் ஆற்றப்பட்ட உரையினை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அரசியல் வங்குரோத்து நிலையினை மறைப்பதற்கு மேற்கொண்டுள்ள ஒரு அரசியல் பாதையென கருதுகின்றேன்.
மன்னார் ஆயர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர். என்னில் எந்த பிழையும் இல்லை, இதனை தெளிவாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளேன்.
எமது தரப்பு நியாயங்களை சொல்ல கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ள வத்திக்கானுக்கும் செல்லவும், மனித உரிமை குறித்து ஜெனீவாவுக்கும் சென்று சொல்வேன் என்பதை அறிவித்துள்ளேன்.
மன்னாரில் இடம் பெயர்ந்த அமைப்பு என்று முகவரியிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் என்ற அனாமதேய அமைப்பு அறிக்கைகளை விட்டுவருவது குறித்து எனது கண்டனத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழ் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முஸ்லிம்களுடனான தமிழர்களின் உறவை சீர்குலைப்பதில் இந்த மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் அமைப்பு முன்னணியில் இருப்பதை காணமுடிகின்றது.
சமூக ஆர்வலர் அமைப்பு குறிப்பாக ஒரு சமூகத்தை மற்றும் பிரதி நிதித்துவப்படுத்துவனவாகவே அமைந்துள்ளதை அவர்களது அநாகரிமான எழுத்துக்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. எனவே இது சமூக ஆர்வலர் அமைப்பாக இருக்காது என்பதும் எனது கருத்தாகும்.
இவ்வாறான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு என்றும் முன்வந்ததில்லை, அவர்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி, மீண்டும் இன ரீதியான கலவரம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். என்பதை சகோதர தமிழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
துண்டுப் பிரசுரங்களுக்கு உரிமை கோரும் அளவுக்கு நாம் வங்குரோத்து அரசியல் செய்யவில்லை. மிகவும் நேர்மையாக தமிழ், கத்தோலிக்க, முஸ்லிம், சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அரசியலை தான் செய்துவருகின்றோம்.
தமிழ் மக்களை முஸ்லிம்களிடமிருந்து பிரித்து, அதன் மூலம் தேர்தல் காலங்களில் பொட்டனி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போன்று அரசியலிற்காக வாக்குச் சேர்க்க எடுக்கும் ஒரு அமைப்பாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் அமைப்பு செயற்படுகின்றது என்பது மட்டும் புலனாகின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனது முகத்திரையினை கிழிக்க ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துசெய்தி - விளக்குகிறார் அமைச்சர் றிசாத்
Reviewed by NEWMANNAR
on
May 26, 2012
Rating:

1 comment:
இஸ்லாமிய சமயம்
3. வாழ்பவரும், தாமாக இருப்பவரும், இரக்கமும் வல்லமையும் மிக்கவரும், விண்ணையும் மண்ணையும் படைத்தவரும்,5 மக்களிடத்தில் பேசியவருமான ஒரே கடவுளைத் தொழுகின்ற இஸ்லாமிய மக்களுக்குத் திருச்சபை சிறந்த மதிப்: அளிக்கிறது. இஸ்லாமிய சமயம் தன்னைத்தானே ஆபிரகாமுடன் விருப்போடு இணைத்துக் கொள்கிறது. அவர் கடவுளுக்கு அடிபணிந்ததுபோல இஸ்லாமியர்களும் கடவுளது மறைவான திட்டங்களுக்கு முழு உள்ளத்தோடு அடிபணிந்திட முயற்சி எடுக்கிறார்கள். இயேசுவை அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்கூட, அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்று வணக்கம் செலுத்துகிறார்கள். அவருடைய கன்னித்தாயாகிய மரியாவையும் பெருமைப்படுத்துகிறார்கள். சிலவேளைகளிலே அவர்கள் பக்தியோடு அவரிடம் வேண்டவும் செய்கிறார்கள். இன்னும், உயிர்ப்பிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கடவுள் அவர்களுக்குரிய பயனை அளிக்கும் தீர்ப்பு நாளை இஸ்லாமியர் எதிர்நோக்கியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் ஒழுக்க வாழ்வை மதிப்பதோடு சிறப்பாக இறைவேண்டல், ஈகை, நொப்பு ஆகியவற்றின் வழியாகக் கடவுளை வழிபடுகிறார்கள்.
காலப்போக்கிலே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பற்பல கருத்து வேறுபாடுகளும் பகைமைகளும் ஏற்பட்டது உண்மையே. இருப்பினும், கடந்தவற்றை மறந்து, இருதிறத்தாரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக நேர்மையுடன் ஈடுபடவும், எல்லா மனிதருடையவும் நன்மைக்காகச் சமூக நீதி, ஒழுக்க நலன்கள், அமைதி, சுதந்திரம் ஆகியவற்றைப் பேணிக் காத்து மேம்படுத்துவதில் ஒத்துழைக்கவும் திருச்சங்கம் எல்லாருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.
அனைத்து மக்களையும் அரவணைக்கும் சகோதரத்துவம்
5. யாவரும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலரை நம் உடன்பிறப்புகளாக நாம் நடத்த மறந்தோம் என்றால் கடவுளை அனைத்து மக்களின் தந்தையென அழைத்து நாம் மன்றாட இயலாது. ''அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை'' (யோவா 4:8) என விவிலியம் கூறுமளவிற்குத் தந்தையான கடவுளோடு மனிதர் கொண்டுள்ள உறவும் அவர்களின் உடன்பிறப்புகளாக மற்ற மனிதரோடு அவர்க்குள்ள உறவும் நெருங்கிப் பிணைந்துள்ளன.
எனவே, மனிதருடைய மாண்பையும் அதன்வழி பிறக்கின்ற உரிமைகளையும் பொறுத்தமட்டில் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரையோ, ஓர் இனத்திலிருந்து இன்னோர் இனத்தையோ அநீதியாகப் பிரித்துப் பேசும் எந்தக் கொள்கையும் செயல்முறையும் அடிப்படையற்றவை.
இக்காரணத்தை முன்னிட்டு, இனம், நிறம், வாழ்க்கை நிலை, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் எம்மனிதரையும் பிரித்து வேறுபடுத்துவதும், அவர்களைத் துன்புறுத்துவதும் கிறிஸ்துவின் உளத்திற்கு முரணானவை னத் திருச்சபை கண்டிக்கிறது. ஆகவே, திருத்தூதர்களாக தூய பேதுரு, பவுல் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கிறிஸ்தவர் ''பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருக்க'' (1 பேது 2:12) வேண்டும் எனவும், உண்மையிலேயே விண்ணகத் தந்தையின் மக்களாகத் தாங்கள் இருக்கும்படி,14 இயலுமானால், தங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழ வேண்டும் எனவும்15 இத்திருச்சங்கம் பெருவிருப்புடன் வேண்டுகிறது.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும் திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்களித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்திற்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவையாவையும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
தூய பேதுரு பேராலயம் பவுல்.
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்
அக்டோபர் 28,1965.
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.
Post a Comment