அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதியையும் நீதிமன்றத்தையும் அவமதித்த செயலுக்கு வலி மே.பி.தே.சபை கண்டனத் தீர்மானம் _


 மன்னார் மாவட்ட நீதிபதியையும் நீதிமன்றத்தையும் அவமதித்த செயலுக்கு வலி மேற்கு பிரதேச சபையினால் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


வலிமேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் புதன் கிழமை இடம் பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் கபையின் தலைவரினால் கொண்டுவரப்பட்டு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குறிப்பி;டும் பொழுது நீதிமன்றத்தின் செயற்பாட்டை விமர்சிப்பதும் அதனை முறை தவறி கையாள முன் நிற்பதும் நீதித்துறையை பெரும் சவாலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கும் செயலாகும்.

நீதிமன்றத்தையே கேள்விக்குறியாக்கினால் இதனை யாரிடமும் முறையிடமுடியாது.நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ___
நீதிபதியையும் நீதிமன்றத்தையும் அவமதித்த செயலுக்கு வலி மே.பி.தே.சபை கண்டனத் தீர்மானம் _ Reviewed by NEWMANNAR on July 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.