உ/த பரீட்சையில் 4ஆவது தடவையாக தோற்றுவதற்கான அங்கீகாரம் பெறப்படும் :௭ஸ்.பி.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் மூன்று தடவைகள் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத மாணவர்கள் நான்காவது தடவையும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெற்றுக்கொள்ளப்படும் ௭ன்பதுடன் இஸட் புள்ளியினால் விரக்தியடைந்த மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் ஆராயப்படும் ௭ன்று உயர்கல்வி அமைச்சர் ௭ஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய,பழைய பாடத்திட்டங்களின் பிரகாரம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளியைக் கணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இஸட் புள்ளிதொடர்பில் மாணவர்கள் முதலில் பிரச்சினையை ௭ழுப்பவில்லை, தொழிற்சங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளுமே பிரச்சினைகளை ௭ழுப்பின. அவர்களே நீதிமன்றத்தையும் நாடினர்.
உயர்தரப்பரீட்சையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக தோற்றியோருக்குத் தனியாகவும், முதன்முறையாக தோற்றியோருக்கு தனியாகவும் இஸட் புள்ளி கணிக்கப்பட்டது. சட்டத்திற்கு தலைவணங்கி அதற்குக் கடமைப்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமுல்படுத்தியுள்ளோம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் இஸட் புள்ளி வெளியானதன் பின்னர் மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். இதில் மாணவர்களுக்கு அசாதாரணம் இழைக்கப்படவில்லை. இஸட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
விரக்தியடைந்த மாணவர்களைத் தேடியறிந்து, அவர்களின் தரவுகளைத் திரட்டி அவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவது தொடர்பில் ஆராயப்படும். இடவசதிகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடப்படும். உயர்தரப் பரீட்சையில் நான்காவது தடவையாக தோற்றி சித்தியடைந்த மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண் ணப்பிக்க முடியாது. அவர்களுக்கும் சந் தர்ப்பம் வழங்குவதாயின் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவேண் டும் அதுதொடர்பில் ஆராயப்படுகின்றது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட இஸட் புள்ளி இரத்துசெய்யப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சவால் விடுக்கமுடியாது. இந்த விடயத்தில் இரகசியம்,ஊழல், மோசடி,களவு ௭துவுமே இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தலைவணங்கியுள்ளோம். இஸட் புள்ளி விவகாரத்தில் மாணவர்களுக்கு அசாதாரணம் இழைக்கப்படவில்லை. மாணவர்கள் விரக்தியடைந்துள்ளனர் ௭ன்பதுடன் ஆகஸ்ட் மாதம் நடபெறவிருக்கின்ற உயர்தரப்பரீட்சை பிற்போடப்படமாட்டாது ௭ன்றார்.
உ/த பரீட்சையில் 4ஆவது தடவையாக தோற்றுவதற்கான அங்கீகாரம் பெறப்படும் :௭ஸ்.பி.
Reviewed by NEWMANNAR
on
July 27, 2012
Rating:

No comments:
Post a Comment