மன்னார் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில்.
மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் தற்போது வரை இடம் பெறாத நிலையில் உள்ளதினால் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லுகின்றனர்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னாரில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்றம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் மன்னார் நீதவான் அவர்களை அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொலைபேசியில் அச்சுறுத்திய சம்பவங்களை கண்டித்து மன்னார் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த மாதம் 19 (19-07-2012)ஆம் திகதி தொடக்கம் கடந்த வெள்ளிக்கிழமை 10(10-08-2012) ஆம் திகதி வரை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம் பெறவில்லை.
சட்டத்தரணிகளும் நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதில்லை.இதனால் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களை பிணையில் எடுக்க முடியாத நிலையில் உறவினர்கள் உள்ளனர்.
-அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் கைதிகள் திருப்பி கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதனால் மன்னார் நீதிமன்றத்தில் அதிகலவான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
-மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ள 13 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அடையாளம் காணப்பட்ட ஏணைய 35 பேரும் இதுவரைடி கைது செய்யப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில்.
Reviewed by NEWMANNAR
on
August 12, 2012
Rating:

No comments:
Post a Comment