இணைந்த கணித வினாப்பத்திரம் தொடர்பாக சிக்கல்
க.பொ.த. உயர்தரபரீட்சையில் நேற்று நடைபெற்ற இணைந்த கணித பாட வினாப்பத்திரத்தின் சிக்கலொன்று தொடர்பாக பல முறைப்பாடுகள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே. புஷ்பகுமார தெரிவிததுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இவ்வினாப்பத்திரத்த்தை தொகுத்த பேராசிரியர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"எனினும் வினாப்பத்திரம் I மற்றும் II ஐ கருத்திற்கொள்ளும்போது குறித்த கேள்வி 1.5 புள்ளிகளுக்கு மாத்திரமே உரியது. எனவே முறைப்பாடுகளை அறிக்கை ஏற்றுக்கொண்டால் அவ்வினாவுக்கு விடையளித்த அனைவருக்கும் பூரண புள்ளிகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்" என அவர் கூறினார். (லக்னா பரணமான்ன)
இணைந்த கணித வினாப்பத்திரம் தொடர்பாக சிக்கல்
Reviewed by NEWMANNAR
on
August 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment