அண்மைய செய்திகள்

recent
-

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின விழாக்கள் -- மன்னாரில்!

நாடெங்கும் நடைபெற்றுவருகின்ற சுவாமிஜியின் 150வது பிறந்த தின நிகழ்ச்சிகள் மன்னாரிலும் வெகு சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின்  மாவட்டங்கள் தோறும் சுவாமிஜியின் ஆன்மீகக் கருத்துகளும், சமய மேன்மைகளும் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னாரிலும் இதற்கான விழாக்குழுககள் அமைக்கப்பட்டுள்ளன.


    கிராம மட்டங்களிலும், நகர மட்டத்திலும் கிரமமாக நிகழ்வுகளை நடத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்றும் சமீபத்தில் இடம்பெற்றது. மன்னார் சித்தி விநாயகர் இந்து  தேசியக் கல்லூரியில் விழாக்குழுவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, கூட்டம் நடாத்தப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பிரதிநிதிகளும் தெரிவானார்கள். நந்திக்கொடிகள், வாழை தோரணங்கள் சகிதம் அலங்கரிக்கப்படும் வீதிகள் முதலாக, இந்துக்களின் உள்ளத்தில் பேரொளியை தரவல்ல சமய,கலை,பக்தி நிகழ்ச்சிகள்வரை விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

         கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிரசன்னத்துடன் திருவாளர்கள்.திருநாவுக்கரசு, தயானந்தராஜா, பிருந்தாவனநாதன், ராமகிருஷ்ணன், நடேசன்,சூரியகுமார் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்களும் நடத்திய இச் சந்திப்பில் பெருமளவில் ஆர்வலர்கள் கலந்து ஒத்துழைப்பு வழங்கினர்..


மன்னார் இணையத்தளத்துக்காக- முத்து


சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின விழாக்கள் -- மன்னாரில்! Reviewed by NEWMANNAR on August 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.