அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தொடர்ந்தும் சீரற்ற மின்சாரம்-பாவனையாளர்கள் தொடர்ந்தும் பாதிப்பு.


மன்னாரில் அறிவித்தல்களையும் மீறி நினைத்த நேரத்திற்கு மின் தடை ஏற்படுவதாக மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மின்சார சபையின் அறிவித்தல்களுக்கு அமைவாக குறித்த நேரங்களுக்கு மட்டும் மின் தடை ஏற்பட்டு வந்தது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் நாள் இன்றிற்கு இரவு பகல் பாராது தொடர்ந்தும் மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது.
ஆனால் மாதந்தம் வழங்கப்படகின்ற மின் பட்டியல் அதிகரித்த நிலையிலே காணப்படுகின்றது.
இரவு பகல் பாராது மன்னார் மின்சார சபையால் மின் தடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரங்களுக்கு அப்பால் தொடர்ந்தும் மின் தடை ஏற்படுகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்கள்,வர்த்தகர்கள்,சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
-எனவே தொடர்ந்தும் குறித்த பிரச்சினைகள் இடம் பெற்று வருவதினால் மன்னார் மின்சார சபை இவ்விடயத்தில் தலையிட்டு மன்னார் மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின் பாவனையாளர்கள் மின்சார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னாரில் தொடர்ந்தும் சீரற்ற மின்சாரம்-பாவனையாளர்கள் தொடர்ந்தும் பாதிப்பு. Reviewed by NEWMANNAR on September 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.