அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம்.


இந்தி வீட்டுத்திட்டத்திற்கென மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ரசூல் புது வெளி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 3 பேருக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த  வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.




 நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரசூல் புதுவெளி கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கென 47 பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

 இந்த நிலையில் குறித்த கிராமத்தில் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக கடந்த  வியாழக்கிழமை 3 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம் பெற்றது.

 இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரையா,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட்,மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் உப தலைவர் பி.ஜேறோம் உற்பட பலர் கலந்து கொண்டனர். இதன் போது மூன்று வீடுகளுக்கும் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.






மன்னாரில் இந்திய வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம். Reviewed by NEWMANNAR on October 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.