அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர ஆலய 37வது பொதுக்கூட்டம் இன்று இனிதே நிறைவு பெற்றது

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய 37 வது பொதுக்கூட்டம்  இன்று (04.11.2012)  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணி அளவில் கேதீச்சர நாதர் ஆசியுடன் இனிதே நிறைவு பெற்றது.


இப் பொதுக்கூட்டத்தில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர் உறுப்பினர் தெரிவானது இலங்கையில் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் சகலரும் எவ்வித பாகுபாடின்றி தெரிவுசெய்யப்பட்டனர்.

அதாவது  மன்னார்,முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை,மட்டக்களப்பு,கண்டி,ஆகிய இடங்களிலுமுள்ள இந்துக்கள் பாரபட்சமின்றி நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

மற்றும் இக் கூட்டமானது ஆலய  அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்தே இடம் பெற்றது.அங்கத்தவர் தெரிவு ஒழுங்கு  முறைப்படி பாரபட்சமின்றி இடம்பெற்றது பெருமைக்குரியது.

இப்பொதுக் கூட்டத்திற்கு சைவ பெரியார்கள்.சமூக ஆர்வலர்கள் ,இந்து இளைஞர்கள்  என  சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.எவ்வித தடங்கலும் இன்றி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

மேலதிக தகவல்கள் விரைவில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
திருக்கேதீஸ்வர ஆலய 37வது பொதுக்கூட்டம் இன்று இனிதே நிறைவு பெற்றது Reviewed by NEWMANNAR on November 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.