மன்னார் மாவட்டத்தில் தரம் -05 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஆளுனர் விருது வழங்கி கௌரவிப்பு.-படங்கள் இணைப்பு,
இவ்வருடம் இடம் பெற்ற தரம் -05 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மானவர்களுக்கு ஆளுனர் விருது வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர்.ம.வி நவோதைய பாடசாலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் இம்முறை சித்தியடைந்த 124 மாணவர்களுக்கு வடமாகான ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களின் ஆளுனர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வெரு மாணவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் பெருமதியான காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வை மன்னார் வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,மற்றும் மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.எம்.சியான்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் கல்வி வலயத்தில் 114 மாணவர்களும்,மடு கல்வி வலயத்தில் 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் தரம் -05 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஆளுனர் விருது வழங்கி கௌரவிப்பு.-படங்கள் இணைப்பு,
Reviewed by NEWMANNAR
on
November 22, 2012
Rating:
No comments:
Post a Comment