மன்னார் பனம்பொருள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்
மன்னார் மாவட்ட பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை மன்னார் எழுத்தூர் தரகன்கோட்டை கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.
பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தால் ஒவ்வொரு வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு புதிய வீடு அமைத்துக்கொடுப்பது வழமையாகும்.
இந்த வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வீடும் தலா 7 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் கிழக்கு பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.அருளப்பு தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஏ.சரத் ரவீந்திர கலந்துகொள்ளவுள்ளார்.
பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தால் ஒவ்வொரு வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு புதிய வீடு அமைத்துக்கொடுப்பது வழமையாகும்.
இந்த வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வீடும் தலா 7 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் கிழக்கு பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.அருளப்பு தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஏ.சரத் ரவீந்திர கலந்துகொள்ளவுள்ளார்.
மன்னார் பனம்பொருள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்
Reviewed by NEWMANNAR
on
November 09, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment