மன்னார் மாவட்டத்திலும் வெள்ளப் பெருக்கு! 2 கிராம மக்களை இடம்பெயருமாறு அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அதனை அண்டிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
இதன்படி, ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படக் கூடிய மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பணைக்குளம், மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை ஆகிய கிராமங்களின் மக்களுக்கே அரசாங்க அதிபர் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.மொஹமட் ரியாஸ் இது குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மன்னார் மாவட்டத்திலும் வெள்ளப் பெருக்கு! 2 கிராம மக்களை இடம்பெயருமாறு அறிவிப்பு
Reviewed by Admin
on
December 22, 2012
Rating:

No comments:
Post a Comment