அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை பிரதான வீதி தற்போது செப்பனிடப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வீதியாக காட்சியளிப்பு.

கடந்த வருடம் வங்காலை பிரதான வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சில வீதிகள் மட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் ஏனைய வீதிகளின்  செப்பனிடும் பணிகள் மந்த கதியிலே நடைபெற்று வந்தன.


 இதனால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந் நிலையில் தற்போது குன்றும் குழியுமாக காணப்பட்ட வங்காலையின் பிரதான வீதியும் புதிதாக செப்பனிடப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும். மக்கள் நடமாடக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

 குறித்த வீதியின்  அவல நிலை தொடர்பில் அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக குறித்த வீதி தொடர்பான செய்தி வெளி வந்த நிலையில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்காலை பிரதான வீதி தற்போது செப்பனிடப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வீதியாக காட்சியளிப்பு. Reviewed by Admin on January 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.