அண்மைய செய்திகள்

recent
-

ஈருளி(Bicycle ) ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்: மன்னாரில் சம்பவம்

மன்னாரில் பிரபல பாடசாலையொன்றில் நடைபெற்ற ஈருளி(Bicycle )  போட்டியில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.


குறித்த பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியை  முன்னிட்டு நடத்தப்பட்ட ஈருளி(Bicycle )   போட்டியில் கலந்துகொண்ட  மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கீழே விழுந்த மாணவன் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனின் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈருளி(Bicycle ) ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்: மன்னாரில் சம்பவம் Reviewed by NEWMANNAR on January 28, 2013 Rating: 5

2 comments:

Unknown said...

எமது குடும்பத்தவர் சார்பாக ஆழ்ந்த அனுதாபவங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.



செ சுரேஸ் சொய்சா

Jathusan Asokathevan said...

13 வர்த்தக மணர்கள் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து நிற்கின்றோம்.

தகவல் :- 13 வர்த்தக பிரிவு மாணவர்கள்
{shc}

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.