கூட்டமைப்பின் பராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று
இந்தக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சிகளின் அணியில் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்தும் ஆராயவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்றபோதிலும் அதற்கான புர்pந்துணர்வு உடன்படிக்கையில் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் பராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று
Reviewed by Admin
on
February 22, 2013
Rating:

No comments:
Post a Comment