அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கடல் தொழில் பாஸ் நடைமுறை நீக்கம்-தேசிய அடையாள அட்டையை பயண்படுத்தி தொழிலுக்கு செல்ல முடியும்.


மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கடற்படையினரினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பாஸ் நடைமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது  தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட மீனவர்களக்கு கடந்த பல வருடங்களாக கடற்படையினரினால் பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர். 
இந்த நிலையில் குறித்த பாஸ் நடைமுறையினை தளர்த்தக்கோரி தொடர்ச்சியாக மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசம் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்ட கடல் தொழில் பிரதி அமைச்சர் மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டரிந்ததோடு பாஸ் நடைமுறையினை தளர்த்துமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கடற்படையினரினால் வழங்கப்பட்டு வரும் கடற் தொழில் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளை தவிர அங்கிகரிக்கப்பட்ட அனைத்து தொழில்களையும் மேற்கொள்ள முடியும். 

மீனவ அடையாள அட்டை வழங்கப்படும் வரை தேசிய அடையாள அட்டையினை கடற்படையினக்கு காண்பித்து விட்டு தொழிலுக்கு செல்ல முடியும். 

பல வருடங்களாக காணப்பட்ட கடற்தொழில் பாஸ் நடைமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை மீனவர்களுக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச தலைவர் நூர் முஹமட் முஹம்மது ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கடல் தொழில் பாஸ் நடைமுறை நீக்கம்-தேசிய அடையாள அட்டையை பயண்படுத்தி தொழிலுக்கு செல்ல முடியும். Reviewed by Admin on March 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.