மன்னார் பிரதான பாலத்தில் உள்ள மின் விளக்குகள் வருடக்கணக்காக ஒளிராத நிலையில்-மன்னார் ஆர்.டி.ஏ அசமந்தப்போக்கில்.படங்கள்

மன்னார் பிரதான பாலத்தில் அதி உயரம் கொண்ட 5 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் விளக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஒளிராத நிலையில் காணப்படுகின்றது.இது தொடர்பில் அதிகாரிகளினாலும்,மக்களினாலும் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு பல தடைவை கொண்டு சென்ற போதும் மன்னார் நகர சபை எவ்வித நடவடிக்கைகளையும் மேறகொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வெளிச்சம் இல்லாததன் காரணத்தினால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கழுதை,மாடு போன்றவை இரவு நேரங்களில் பாலத்தில் நடமாடுவதினால் திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
குறித்த பிரதான பாலத்தில் அமைந்துள்ள மின் விளக்குகள் அணைத்தும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (ஆர்.டி.ஏ)பராமறிப்பிலேயே உள்ளது.
குறித்த பாலம் அமைக்கப்பட்ட போது அதன் பராமறிப்புக்கள் அனைத்தும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் (ஆர்.டி.ஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் விளக்குகளுக்காண மின்சார கட்டணங்களை மாத்திரம் மின்சார சபை செலுத்தி வருகின்றது. ஏனைய திருத்த வேலை மற்றும் பராமரிப்புக்கள் அனைத்தும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமே (ஆர்.டி.ஏ) உள்ளது.
-பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒளிராத நிலையில் மக்கள் எங்களிடம் பல தடவை முறையிட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் நகர சபை பல தடவை ஆ.டி.ஏ யின் கவனத்திற்கு பல தடவை கொண்டு சென்றும் அவர்கள் உரிய நடவடிக்கையினை இது வரை மேற்கொள்ளவில்லை என மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார்.
நமது நிருபர் -வினோத்
மன்னார் பிரதான பாலத்தில் உள்ள மின் விளக்குகள் வருடக்கணக்காக ஒளிராத நிலையில்-மன்னார் ஆர்.டி.ஏ அசமந்தப்போக்கில்.படங்கள்
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment