மன்னார் சர்வோதையத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதர கொடுப்பனவு வழங்கி வைப்பு-படங்கள்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மன்னார் சர்வோதையம் இன்று திங்கட்கிழமை 20 குடும்ப பெண்களுக்கு வாழ்வாதாரக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்துள்ளது.
-மன்னார் சர்வோதைய காரியாலையத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பப்பெண்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரன்,சர்வோதைய அமைப்பின் சமூக வேலைத்திட்ட இணைப்பாளர் வேலு கணேஸ்,கணக்காளர் மகேந்திரன் கௌதமி ஆகியோர் இணைந்து காசோலைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சர்வோதையத்தினால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதர கொடுப்பனவு வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 25, 2013
Rating:
No comments:
Post a Comment