அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 510 குடி நீர் இணைப்புக்கள் துண்டிப்பு

மன்னாரில் அறிவித்தல்களையும் மீறி அதி கூடிய நிலுவைத்தொகைகளைக் கொண்ட உள்ளக குடி நீர் இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் வி.உதயசீலன் தெரிவித்தார்.


இதற்கமைவாக அறிவித்தல்களையும் மீறி அதி கூடிய நிலுவைத்தொகைகளை செலுத்தாத 510 பாவனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய குடி நீர் இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருகின்றது. 5 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உள்ள நிலுவைத் தொகைகளை உடைய நீர் பாவனையாளர்களுடைய இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருகின்றது.

 துண்டிக்கப்படும் இணைப்புக்களை உடனடியாக மீளப்பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையினை முழுமையாக செலுத்துவதோடு,மீள் இணைப்புக்கட்டணமாக இரண்டாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய்(2240.00) செலுத்துவதன் மூலம் குடி நீர் இணைப்பை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச்சபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் வி.உதயசீலன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 510 குடி நீர் இணைப்புக்கள் துண்டிப்பு Reviewed by Admin on May 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.