அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண ஆசிரியர்களுக்கு கஷ்டப் பிரதேச கொடுப்பனவு கிடைக்கவில்லை - ஆசிரியர் சங்கம்

வடமாகாணத்தின் சில பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு கஷ்டப் பிரதேச கொடுப்பனவு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


 குறிப்பாக யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு அண்மையில் மீளத் திறக்கப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களே இதனால் அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனிடம் வினவியபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிதார்.

 இதற்கமைய குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்களுக்குரிய கஷ்டப் பிரதேச கொடுப்பனவு பெரும்பாலும் இந்த மாதத்திற்குள் கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண ஆசிரியர்களுக்கு கஷ்டப் பிரதேச கொடுப்பனவு கிடைக்கவில்லை - ஆசிரியர் சங்கம் Reviewed by Admin on May 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.