அண்மைய செய்திகள்

recent
-

நான்கு இந்திய மீனவர்களை காப்பாற்றியது கடற்படை

தலைமன்னார் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் சிலரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.


 தலைமன்னாருக்கு சுமார் 10 கடல் மைல் தொலைவில் இவர்கள் பயணித்த படகு இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படை பதில் பேச்சாளார் லெப்டினன் கொமாண்டர் ஜானக்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

 இந்த படகில் இருந்த மீனவர்கள் நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு ஏற்பட்ட படகு தற்போது தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் தமது பாதுகாப்பில் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 இந்த விடயத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கடற்படை பதில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


நான்கு இந்திய மீனவர்களை காப்பாற்றியது கடற்படை Reviewed by Admin on June 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.