அண்மைய செய்திகள்

  
-

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசேட பிரேரணை மூலம் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் ஏ.எல்.அஸ்ஹர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை கடந்த 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

 உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Admin on August 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.