ஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஃபொன்டிரா பால் மா உற்பத்திகளில் டிசிடி எனப்படும் இரசாயனப் பதார்த்தம் கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்தே நாம் இந் நடவடிக்கையினை எடுத்துள்ளதாக அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை காரணமாகக் கொண்டு இலங்கையுடனான கூட்டுறவு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கத் தீர்மானித்துள்ளோம். இலங்கையில் உள்ள எமது ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த கால எமது நிறுவனத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களின் போதுகூட எமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:

No comments:
Post a Comment