அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தென்பகுதி சிங்களவர் சட்டவிரோதமாக மண் அகழும் நடவடிக்கை-மக்கள் விசனம்.

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு தொகுதி மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருவதோடு குறித்த காணிகள் தென்பகுதி சிங்களவர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக பரப்புக்கடந்தான் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

பரப்புக்கடந்தான் கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து சென்றனர்.

இவர்களின் சுமார் 400 குடும்பங்கள் வரை தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் மீண்டும் தமது கிராமத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த மக்களின் 1500 ஏக்கர் காணியை மன்னாரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அரசியல் வாதிகளின் ஆதரவுடன் பிடித்து வைத்துள்ளார்.

பிடித்த காணியில் வேலைத்திட்டங்களை குறித்த தனிநபர் மேற்கொள்ள இருந்த நிலையில் பரப்புக்கடந்தான் கிராம அபிவிருத்திச்சங்கம் தலையிட்டு குறித்த வேலைத்திட்டங்களை இடை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் 1500 ஏக்கர் காணியில் 500 ஏக்கரை போலித்தனமாக தென்பகுதி சிங்களவர் ஒருவருக்கு விற்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிங்களவர் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபரிடம் குறித்த காணியில் மண் அகழ்வில் ஈடுபடுவதற்கான அனுமதியனை பெற்றுக்கொண்டார்.

எனினும் பரப்புக்கடந்தான் கிராம அலுவலகர் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் குறித்த தென்பகுதி சிங்களவர் கிராம அலுவலகரை அச்சுருத்தி அனுமதியை பெற்றுக்கொண்டார்.

  தற்போது குறித்த 500 ஏக்கர் காணியில் குறித்த சிங்களவர் செம் மண்(கிரவல்மண்) அகழ்ந்து தென்பகுதிக்கு கொண்டு செல்லவதற்காண நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பரப்புக்கடந்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மண் அகழ்வின் காரணமாக குறித்த கிராமம் எதிர்காலத்தில் பாரிய அபாயங்களுக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக அந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


-மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் சுயநலத்துடன் அரசியல் வாதிகளுக்கு அடி பணிந்து நடந்து கொள்ளுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-எனவே உரிய அதிகாரிகள் தலையிட்டு குறித்த காணிகயில் மண் அகழ்வை தடை செய்து மக்களை அபாயத்தில் இருந்து பாதுகாக்குமாறு பரப்புக்கடந்தான் கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடமும்,பாராளுமன்ற உறுப்பினர்களிடமும்,பிரதேச சபை அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தென்பகுதி சிங்களவர் சட்டவிரோதமாக மண் அகழும் நடவடிக்கை-மக்கள் விசனம். Reviewed by Admin on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.